இந்தியாவுடன் சண்டை நிறுத்தம்: பாக்., அறிவிப்பு
இந்தியாவுடன் உடனடியாக சண்டை நிறுத்தம் செய்வதாக பாக்., துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இசாக் தார் அறிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மை, ஒற்றுமைக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புக்கு பாகிஸ்தான் பாடுபடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




