மதுரையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ் வாழ்த்து பாடினர். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தேசிய கீதத்தை பாட வைக்கப்பட்டனர்.
அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கனவே, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது.