முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி மூச்சுத் திணறல் மற்றும் தூக்கமின்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் ரத்த அளவுகளில் மாறுபாடு இருந்ததன் காரணமாக மாத்திரைகள் மட்டும் மாற்றப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.