பேருந்து மோதி கணவன் கண் முன்னே மனைவி உயிரிழப்பு..!
வேலூர் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்யச் சென்ற பொழுது அரசு பேருந்து மோதி கணவர் கண் முன்னே மனைவி பரிமளா தலைநசுங்கி உயிரிழந்தார்.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அரசு பேருந்தை கண்டித்தும் வேகத்தடையில் வாகனங்கள் அதி வேகமாக செல்வதாக தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த நிலையில் மக்கள் கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





