மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்யும் முகாம் தொடக்கம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மின்வாரிய அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்யும் முகாமை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
உத்திரமேரூர் மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வீடு மற்றும் பொது சேவை மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் தங்களது பெயரில் மாற்றுக் கொள்வது போன்றவை மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆணையினை பயனாளிகளுக்கு வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





