சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். தனது வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், uncut diamonds உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்து இருந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இது பற்றி தீவிரமாக விசாரித்து வந்தனர். வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் மீது தான் ஐஸ்வர்யா சந்தேகம் தெரிவித்து இருந்தார்.போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த 40 வயது ஈஸ்வரி என்ற பெண் தான் திருடியது என தெரியவந்திருக்கிறது.
அவரது வங்கி கணக்கில் நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் அடிப்படையில் போலீசார் இதை கண்டுபிடித்து இருக்கின்றனர். அவரை கைது செய்து இருக்கும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகள் :
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே தகராறு..!
பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்..!
ஓபிஎஸ் மேல அவ்ளோ பயமா? டஃப் கொடுக்கும் 5 ஓபிஎஸ்கள்..!