பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய பாஜக பிரமுகரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். திருச்சி மலைக்கோட்டையை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் வினோத் instagram மூலம் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவியிடம் பழகியுள்ளார்.
திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வினோத் பள்ளி மாணவியிடம் இருந்து விலகியுள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக பிரமுகர் வினோத்தை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வினோத்தை கடந்த மாதமே கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக திருச்சி மாவட்ட பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். வினோத்திற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!
விக்டோரியா நியமனத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!
ஒருவர் எந்த வேலை செய்தாலும் மதிக்க வேண்டும் - ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து
108 நம்ம கிளினிக்குகளை தொடங்கி வைத்தார் கர்நாடகா முதல்வர்..!