வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்க வைக்கிறார். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி வாரணாசியில் நடைபெறுகிறது.
பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின்கலாச்சாரத் துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும் அழகிய தமிழ் மொழியையும் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வாரணாசிக்கு வருகை தர ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த கல்வியாளர்கள் மாணவர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருந்தனர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் அங்குள்ள பாரதியாரின் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார்.
மேலும் செய்திகள் :
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!
ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!
ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!
மதிமுக எடுத்த திடீர் முடிவு.. தீப்பெட்டி கேஸ் சிலிண்டர் சின்னம்..!
லேப்டாப்புகளை அபேஸ் செய்த பெண்..!