சிவசங்கர் பாபாவை 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு..!
சிவசங்கர் பாபாவை வரும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசங்கர் பாபா மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ள நிலையில் அவர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது விசாரணை நடத்திய நீதிபதி சிவசங்கர் பாபாவை வரும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.






