நவம்பர் 1 முதல் வாட்ஸ் அப் செயல்படாது..!
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர், இந்த செயலி தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
தற்போது வாட்ஸ் அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பல ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் 11 மற்றும் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ்அப் செயலி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் வெர்ஷன்களை ஆதரிக்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.






