கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல்..! திடீரென தரையிறக்கம் செய்யப்பட்ட விமானம்..!
திருவனந்தபுரத்தில் இருந்து சவுதி அரேபியா நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக மீண்டும் திருவனந்தபுரத்தில் தரை இறக்கப்பட்டது.
இன்று காலை சுமார் எட்டு மணிக்கு அந்த விமானம் புறப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் பறந்த பின் முன்பக்க கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலை விமானிகள் கண்ட நேரம் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.






