21 எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார்..!
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 21 எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் 21 எழுத்தாளர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் விருதினை வழங்கினார்.
நாற்பதாயிரம் ரூபாய் புத்தக வெளியீட்டுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிலையில் முதல் தவணையாக தற்போது 20 ஆயிரம் ரூபாயும் பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.






