இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால் தான் அரசு வேலை கிடைக்கும்..!
இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால் தான் அரசு வேலையும் அரசு திட்ட உதவிகளும் கிடைக்கும் என மசோதா அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த கொள்கை முடிவை ஏற்கனவே அசாம் உள்ளாட்சித் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்திலிருந்து குடியேறியுள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்தை தடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் மம்தா சர்மா ஏற்கனவே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் பழங்குடியினருக்கு இந்த கொள்கை பொருந்தாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





