சினிமாவை விட்டு விலகும் நடிகை கார்த்திகா..!
பட வாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டு நடிகை கார்த்திகா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1980களில் தமிழில் உள்ள தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா.
இவர் மகளான கார்த்திகா கோ படத்தின் மூலம் அறிமுகமாகி அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இறுதியாக 2016ஆம் ஆண்டு அவர் நடித்த திரைப்படம் சில பிரச்சனைகள் காரணமாக வெளியாகாத நிலையில் இதன் பின் வேறு எந்த பட வாய்ப்பும் அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலில் ஈடுபட போவதாக கார்த்திகா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






