தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் நாளை மறுநாள் கலந்துரையாடுகிறார்..!
தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கலந்துரையாடுகிறார். மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த கலந்துரையாடல் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு என்பது ஒரு வாய்ப்பு தானே தவிர வாழ்வின் கனவுக்கான முடிவில்லை என்று கூறினார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தேர்வு எழுத மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடினார். கொரொனா காரணமாக கடந்த ஆண்டு கலந்துரையாடல் நடைபெறவில்லை.






