நூறில் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது..!
தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்பு நூற்றில் ஒருவருக்கு கொரொனா இருந்த நிலையில் தற்போது நூறில் இருவருக்கும் என்கிற அளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொரொனா தொற்று தமிழகத்தில் ஏறுமுகத்தில் உள்ளது எனவும் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். கொரொனாவை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதே அதிகரிப்புக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.






