அதிமுக – திமுக வேட்பாளர்கள் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தை பரிமாறினர்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக – திமுக வேட்பாளர்கள் வேட்புமனு பரிசோதனையின்போது ஒருவருக்கு ஒருவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராமசந்திரன், திமுக சார்பில் எஸ் எஸ் அன்பழகனும், தேமுதிக சார்பில் ஜீவா போட்டியிடுகின்றனர். அவர்கள் முன்னிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
அப்போது அதிமுக வேட்பாளர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திமுக வேட்பாளர் அன்பழகன் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.






