நாகலாந்தில் விவசாய நிலத்தில் கிடைத்த வைரம்..!
நாகலாந்தில் வைரம் வெட்டி எடுக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆராய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் வாக்சிங் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நிலத்தில் விவசாயம் செய்த ஒருவரின் கலப்பையில் பளபளப்பான கல் ஒன்று சிக்கியுள்ளது. அது வைரமாக இருக்கக் கூடும் என அந்த கிராமத்தின் தகவல் பரவியது. இதனையடுத்து அந்த கிராமத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கியுள்ளனர்.
இதனிடையே அந்த கிராமத்தில் வைரம் உள்ளதா என்பதை ஆராய நாகலாந்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். புவியியல் ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு நேரில் ஆய்வு நடத்தவும் அவர் கட்டளையிட்டுள்ளார்.






