அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் வருகின்றன..!
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வந்ததில் மக்கள் பிரதிநிதித்துவம் குறித்த குறைபாடுகள் இருப்பதால் அவற்றை நீக்கக் கோரி தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி உள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் வரும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் வரும். ரிசர்வ் வங்கியின் உரிமை பெற்றால் தான் வங்கிகளால் இயங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.






