மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலத்தை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலை இருந்து வந்தது.

 

பருவ மழை தவறும் போதும் கர்நாடக அணைகளில் இருந்து போதிய நீர் திறக்கப்படாத போதும் மேட்டூர் அணை திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான நீர்திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். டெல்டா மாவட்ட அமைச்சர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


Leave a Reply