கேரளத்தில் மீண்டும் உயரந்த கொரொனா பாதித்தோரின் எண்ணிக்கை!

வளைகுடாவில் இருந்து திரும்பி வந்த பயணிகளால் கேரளாவில் கொரொனா பாதிப்புகள் திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று மட்டும் 26 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது. மார்ச் இறுதிக்கு பின் இதுவே அதிகபட்ச ஆகும் என்று முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

 

இந்த 26 பேரில் 8 பேர் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் என்றும் மற்றவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக-கேரள எல்லையில் தடுத்து நிறுத்த பட்டவர்களை கேரள எம்‌பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் குழு ஒன்று நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.


Leave a Reply