--- --:--:-- --

டாஸ்மாக்கை குறிவைத்து கொள்ளையடிக்கும் குபேரன்..!

6

சென்னை சுற்றுவட்டாரத்தில் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வேலூரை சேர்ந்த நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை ஆர்கே மஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டது .

 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு வேலூர் கருகம்பத்தூர் இருந்த குபேரன் என்ற நபரை கைது செய்தனர் .அவரிடம் இருந்து 13 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 

திருவான்மையூர், தரமணி, வண்ணாரப்பேட்டை, திருமுல்லைவாயில், வடபழனி உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon