--- --:--:-- --

என்.எல்.சி பகுதியில் மாஸ்டர் படப்பிடிப்பு: விஜயை காண அலைமோதிய ரசிகர்கள்!

4

நெய்வேலி என்எல்சி சுரங்கப்பாதையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் விஜய்யை காண இரண்டாவது நாளாக ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

 

பிகில் படம் ஊதியம் தொடர்பாக நெய்வேலி என்எல்சி சுரங்கப் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமானவரித் துறையினர் சென்னை அழைத்து வந்து இருபத்தி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்த நிலையில் விஜய் மீண்டும் நெய்வேலி சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார்.

 

இந்நிலையில் விஜய்யை காண சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்த நிலையில், விஜய் அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon