பெரும்பான்மை உணர்வுடன் மத்திய அரசு செயல்படக்கூடாது

பெரும்பான்மை தன்மையுடன் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

 

டெல்லியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர் தனக்கு வாக்களித்தவர்களையும் அரவணைத்து செல்வது தான் ஒரு அரசின் கடமை என்றார். நாட்டின் மக்களைவை தொகுதிகளின் எண்ணிக்கை கடைசியாக 1977 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டதாகவும் அப்போது மக்கள் தொகை 55 கோடி மட்டுமே என்றும் குறிப்பிட்டார்.

 

தற்போது மக்கள் தொகை இரட்டிப்பாக இருக்கும் நிலையில், அதற்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளில் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரணாப் ஆலோசனை கூறினார்.


Leave a Reply