தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, வரும் டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கி, டிசம்பர் 24ஆம் தேதிக்குள் முடிந்துவிடும்; அதன் பிறகு தேர்தல் நடத்துவது ஏதுவாக இருக்கும் என்று கருதி, இத்தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநில தேர்தல் ஆணையர் – முதல்வர் அண்மையில் நடத்திய ஆலோசனையின்முடிவில், டிசம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆணைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது.