--- --:--:-- --

வெடிகுண்டுகளுடன் உடை அணிந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பாடகி மீண்டும் மிரட்டல்

Capture

வெடிகுண்டுகளுடன் உடையணிந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் மிரட்டல் விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் பாடகி பிரிஷா டா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. ஆனால் இதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது எனினும் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை என பதிலடி கொடுத்துள்ளது.

 

இந்தியா இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி மாதமாதம் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் அவரை சுற்றி ஏராளமான பாம்புகளும் முதலில் இருந்தன அந்த வீடியோவில் காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது தொடர்ச்சியாக டுவிட்டரில் மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரதமர் மோடியை மிரட்டும் தோனியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் தீவிரவாதி போல உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டியபடி புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு தாம் காஷ்மீரின் மகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாடகியின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் பாரம்பரிய உடையில் இருப்பதாக ஒருவர் விமர்சித்துள்ளார். பாடகியின் உடையை பாகிஸ்தானின் தேசிய உடையாக அறிவிக்க இம்ரான்கான் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மற்றொருவர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வரும் பாகிஸ்தான் பாடகி இந்திய தரப்பில் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon