பொருளாதார மந்த நிலைக்கு தீர்வு காண்பதில் அரசு காட்டும் அலட்சியத்தால் இந்தியர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பனைகள் சூழல் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக தொழில் மாநிலமான மகாராஷ்டிராவில் பல ஆலைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மூடப்பட்ட அறைகளில் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் இருப்பதாக கூறிய மன்மோகன்சிங் தங்கள் பலவீனத்தை மறைக்க எதிர்க்கட்சியினர் மீது பழி போடுவதை அரசு வழக்கமாக கொண்டிருப்பதாகவும் சாடினார். தேசபக்தி விஷயத்தில் காங்கிரசுக்கு பாஜகவும் ஆர் எஸ் எஸ் யு சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறிய மன்மோகன்சிங் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் சாதிக்க அரசு நினைக்க கூடாது எனவும் விமர்சித்தார்.
சிதம்பரம், சிவகுமார் ஆகியோர் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குகள் நடைபெறுவதை மறைமுகமாக சுட்டிக் காட்டி மன்மோகன்சிங் விமர்சித்துள்ளார்.