நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் காட்டம்!

ஆள்மாறாட்டம் செய்த நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ இடம் வழங்கும் கொடூரத்தையும் தொடங்க விடக்கூடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய மாணவன் குறித்து செய்தி வெளியிட்டதை அடுத்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதா உயிரை பறித்து ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யாகளுக்கு மருத்துவ இடமளிப்பது அனுமதிக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் மாணவர் விரோத போக்கையும் அதற்கு துணைபோகும் அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம் என்றும் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply