இந்திய படைகளுக்கும் உயிரி, ரசாயன ஆயுத பயிற்சி வழங்க வேண்டும்

வருங்கால போர்களின் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்த பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கருத்தரங்கத்தில் பேசியவர் எதிர்கால போர்களின் போது ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்றார்.

 

எந்த நிலையிலும் இது போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி எதிரி நாட்டின் செயல்பாட்டையும் கட்டமைப்பையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். இந்த சவாலை எதிர்கொள்ள நம் படையினருக்கும் முறையான பயிற்சி அளிப்பதோடு அது போன்ற ஆயுதங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

 

ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களால் மக்களின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் உடமைக்கும் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படுவதோடு பாதிப்புகளிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் பிடிக்கும் என்றும் அவர் கூறினார். நமது படையினருக்கு இது குறித்து போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறி அவர் உயிரி மற்றும் ரசாயன ஆயுதங்களை முறியடிக்கும் மாற்று ஆயுதங்களை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள நமது விஞ்ஞானிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Leave a Reply