இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்!

அடுத்த மாதம் நவராத்திரி தசரா பண்டிகையை அதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை காலங்களில் பல்லாயிரக்கணக்கான இந்து மக்கள் திரளும் இடங்களில் தாக்குதல் நடத்த இருப்பதாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள் வழிபாட்டுத் தலங்களில் குண்டு வெடிக்கும் என்ற எச்சரிக்கையால் 6 மாநிலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை, மும்பை ,பெங்களூர், போபால், குருஷேத்ரா உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ,ஹரியானா, உத்தரப் பிரதேசம் ,குஜராத் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்டுள்ளன தீவிரவாதியின் பெயர் மிரட்டல் கடிதம் ஒன்று ரோட்டக் ரயில் நிலைய அதிகாரிக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதத்தை அடுத்து ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


Leave a Reply