உடல் நலம் பாதிக்கப்பட்டு காட்டு யானை உயிரிழப்பு!வனத்துறையினரின் அலட்சியத்தால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டு!

கோவை மாங்கரை வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காட்டு யானை உயிரிழப்பு. வனத்துறையினரின்  அலட்சியத்தால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாங்கரைப்பகுதியில் இன்று அதிகாலை 6 காட்டு யானைகள் வந்துள்ளன.இவற்றில் குட்டியுடன் வந்த பெண் காட்டு யானைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்கேயே படுத்துவிட்டது.

 

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை வனத்துறையினர் காட்டு யானையை பார்த்து உடல்நலக்குறைவால் படுத்திருக்கலாம் என கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால்,அதன் உடன் இருந்த குட்டி யானை சிகிச்சை அளிக்க விடாமல் தாய் யானையை சுற்றிச் சுற்றி வந்தது.

சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் குட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியில் இறந்துள்ள 4 வது காட்டுயானை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து வன விலங்கு ஆர்வலர்கள் கூறும் பொழுது வனத்துறையினரின் அலட்சியத்தால் தான் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர்.இது குறித்து வனத்துறையினர் கூறும்போது இது சுமார் 20 வயதுடைய பெண் யானை என்றும், உடல்நலக்குறைவால் படுத்திடுக்கலாம் என்றும், தற்போது 12 பாட்டில் குளுக்கோஸ் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply