சிறுமியை சாக்லெட் தருவதாக கூறி சீரழித்தவனுக்கு 7 வருசம் சிறை தண்டனை

9 வயது குழந்தையை, துணி துவைக்கும் கல்லின்மேல் நீண்ட நேரம் உட்கார்ந்து காத்திருந்து, சீரழித்த செந்திலுக்கு 7 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. திருப்பூர் வவிப்பாளையம் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சம்பவம் இது. பிப்ரவரி 23-ம் தேதி சாயங்காலம் 7 வயசு குழந்தை ஒன்று வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. இதனை பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் செந்தில் என்பவர் கவனித்து கொண்டே இருந்தார். செந்திலுக்கு வயசு 39.

 

சிறுமியை அழைத்து சாக்லெட் தருவதாக கூறி, அருகில் பாதி வேலை முடிந்த நிலையில் இருக்கும் ஒரு கட்டிடத்திற்கு கூப்பிட்டார். ஆனால் பயந்து போன சிறுமியோ, வீட்டுக்குள் ஓடிப்போய் ஒளிந்து கொண்டாள்.ஆனாலும் செந்தில் விடவில்லை.

 

வீட்டு முன்னாடி இருந்த துணிதுவைக்கும் கல் மீது உட்கார்ந்து கொண்டார். சிறுமி எப்படா வெளியே வருவாள் என்று நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தார். ரொம்ப நேரம் கழிச்சி சிறுமி பயந்து பயந்து வெளியே வந்திருக்கிறாள். அப்போது அவளை வலுக்கட்டாயமாக தூக்கிகொண்டு வீட்டின் உள்ளே சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விஷயம் வெளியே தெரிந்து, சிறுமி வீட்டில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு நடந்துவந்தது. இந்தநிலையில், தற்போது குற்றவாளி செந்தில் என்று உறுதி செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

 

செந்திலுக்கு 7 வருஷ ஜெயில், கூடவே 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருவேளை செந்தில் 10 ஆயிரம் ரூபாய் கட்ட தவறினால், இன்னொரு வருஷம் சிறைதண்டனை அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி ஜெயந்தி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.


Leave a Reply