தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஒருவர் தாக்கல் செய்த பொது நலமனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் தமிழ்நாட்டில் இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லைஎன்றும், இதனால் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தாமதம் செய்யபடுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்காக தொகுதிகள் மறுவரை செய்யபட்டதால் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யகூடாது என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றியும்2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.






