திருவண்ணாமலையில் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 2018 ஆம் ஆண்டு 165 மாணவர்களும், 2018 -2019 ஆம் ஆண்டில் 143 மாணவர்களும் பயின்று உள்ளனர்.
2019 -2020 ஆம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க இருப்பதாகவும் , தங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும் கூறி பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வந்தவாசி மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து முன்னாள் மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!
துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை