ஸ்ரீரங்கம் கோயில் ரூ.50 கோடி நிலம் மோசடி – திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி விவகாரத்தில் தி.மு.க பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோயில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றியதாக தி.மு.க பகுதி செயலாளர் ராம்குமார் மீது புகார் எழுந்துள்ளது.
மோசடியாக இடத்தை பதிவு செய்து அதில் கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கோயில் இணை ஆணையர் அளித்த புகாரின் பேரில் தி.மு.க நிர்வாகி ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




