அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு

அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க தேசிய அளவிலான குடிமக்கள் பதிவு அட்டையை அறிமுகப்படுத்த இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரு அவைகளுக்கான கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் சட்ட விரோத குடியேறிகள் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக கூறினார்.

 

மேலும் அவ்வாறு ஊடுருவும் சட்ட விரோத குடியேறிகளை அடையாளம் காண்பதற்காக தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு விரைவில் உருவாக்கப்படும் எனவும் குடியரசு தலைவர் தெரிவித்தார்.


Leave a Reply