திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ஊரக இடத்தில் உள்ள குளத்தில் செத்துகிடக்கும் மீன்களை அப்புறப்படுத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள தாமரை குளம் ஒன்றில் ஏராளமான மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்து வருகின்றன.கடுமையான வெயில், ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாகவே மீன்கள் செத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செத்துகிடக்கும் மீன்களால் அப்பகுதியே கடுமையான துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறும் பொது மக்கள் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!
துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை