விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து வந்த கார் ஒன்று திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு அருகே வந்துள்ளது. அப்போது வலது புறமாக வந்த வாகனம் ஒன்று காரினை ஒதுக்கி விட்டு சென்றுள்ளது.
இதையடுத்து, பழுதாகி சாலையில் நின்று கொண்டிருந்த வெங்காயம் ஏற்றி செல்லும் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த ராஜா என்பவர் உயிரிழந்தார். காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது - செல்வப்பெருந்தகை
நாங்குநேரி போல் மானாமதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!
மார்ச் மாதத்தில் ரயில் சேவையில் மாற்றம்..!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஜே.இ.இ பயிற்சி..!
சிதம்பரம், கனிமொழி மேஜிக்! திமுகவில் 28 சீட்+ ஒரு ராஜ்யசபா.. காங்கிரஸ் பணிந்தது எப்படி?






