அஜாக்கிரதையாக வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது!

அஜாக்கிரதையாக வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை தாம்பரத்தில் வேகமாக வந்த கார் சாலை தடுப்புகள் மற்றும் மற்ற வாகனங்கள் மீது மோதியது. அதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

 

இந்த நிலையில் இன்று வழக்குகள் விசாரணை தொடங்கும் முன்பு இது தொடர்பான ஊடக செய்திகளை மேற்கோள்காட்டிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதனை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளதாகவும், கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களை தடுக்க எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

 

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். வேகமாக, கவனக்குறைவாக வாகனம் ஒட்டி மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனையை இரண்டு ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தும் சட்டப்பிரிவை அமல்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பிய அவர் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 17 ஆம் தேதி ஒத்திவைத்தார்.


Leave a Reply