ஓணம் பண்டிகை: நாளை ரயில்வே முன்பதிவு மையங்கள் அரை நாள் மட்டுமே செயல்படும்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 26) தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை பணிநேர முறையைப் பின்பற்றிச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை காலை 08:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே (ஒரு ஷிஃப்ட்) முன்பதிவு மையங்கள் இயங்கும் எனத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று பயணச்சீட்டு முன்பதிவு செய்யத் திட்டமிடும் பயணிகள் இந்த நேர மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




