கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் டயாலிசிஸ்
செய்தால் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனையின் நர்ஸ் கூறியதால்
அதிர்ச்சி அடைந்த நோயாளி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம்
முருகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் அலி ,வயது 57,மனைவி சாபுராமா,
இவர்களுக்கு ஷர்மிளா பானு,அதீத பானு என இரண்டு மகள் ,மன்சூர்
அலிகான்என்ற மகனும் உள்ளார்.மகளுக்கு திருமணமாகிவிட்டது.
இந்நிலையில் கடந்தசில மாதங்களாக அன்வர் அலி சிறுநீரக கோளாறு காரணமாக
அவதிபட்டு வந்தார்.இதற்காக,திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு,மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை
அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்படி,கடந்த 19 ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் செய்து
கொள்ளவந்தார்.அப்போது பணியில் இருந்த நர்ஸ் ஒருவர் அன்வர் அலியிடம் இங்கு
டயாலிசிஸ் செய்தால் இறந்துவிடுவீர்கள் என தெரிவித்துள்ளார்.
இதைகேட்ட அதிர்ச்சியில் அன்வர்அலி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.இது
குறித்து அன்வர் அலியின் மகள்கள் ஷர்மிளாபானு,ஆதீத பானுகூறியதாவது:-கோவை
அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த நர்ஸ் ஒருவர் என் தந்தையிடம்
உங்களுக்கு டயாலிசிஸ் செய்தால் 90 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என
தெரிவித்தார்.இதனால்,எங்கள் தந்தை பயந்து போனார்.எங்கள் தந்தை நர்ஸ்
கூறிய வார்த்தையால் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார்.
அவரை மருத்துவர்கள் வார்டிற்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.பின்னர்
அவர் இறந்துவிட்டதாக கூறினர். எனவே சம்பந்தப்பட்ட நர்ஸ் மீது உரிய
நடவடிக்கை எடுக்க கூறினர்.