மீன்களுக்கு இறை போட சென்ற 2 சிறுமிகள் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து பலி..!
விராலிமலை விராநூரை சேர்ந்த லாவண்யா மற்றும் யசோதா விராலிமலை மதுரை சாலையில் நீர் நிரம்பிய தெப்பக்குளத்தின் படியில் அமர்ந்து குளத்து மீன்களுக்கு இறையை தூக்கி எறிந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய லாவண்யா குளத்தில் விழுந்து தத்தளித்துள்ளார்.
இதனையடுத்து அவரை காப்பாற்ற நீரில் குதித்த யசோதாவும் நீரில் மூழ்கி தத்தளிக்க அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.






