திருநங்கைகளுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகை..!
கொரொனா தொற்று பொது முடக்க பாதிப்பு காரணமாக திருநங்கைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தகுதியானவர்கள் தங்களின் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற அடிப்படை விவரங்களை தெரிவித்து இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.






