ஊரடங்கு உத்தரவை மீறிய இளைஞர்கள்! நூதன தண்டனை!
மகாராஷ்டிர மாநிலம் அன்சாரியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வலம் வந்த இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் நூதன முறையில் கண்டித்தனர். கொரொனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் பஸார் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே 3 பேர் சாலைகளில் வலம் வந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர்.







