கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான முறையில் உள்ள பெண்..!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய மருந்தகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். குன்னூரில் 37 வயது கர்ப்பிணி ஒருவர் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கியது தெரியவந்தது.





