கணவனும், கொளுந்தனும் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக பெண் குற்றச்சாட்டு..!
பணம் நகை கேட்டு கணவரும், அவருடைய தம்பியும் தொல்லை கொடுத்ததாக கூறி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடியை சேர்ந்த அவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வரும் நிலையில் அவருடைய மனைவி ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த தம்பி வீட்டிற்கு நகை மற்றும் பணிகளை தரும்படி கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஜெரோம் இடம் பணம் கேட்டு பீட்டர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெண் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றார். அவரை போலீசார் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்தாண்டு இதேபோன்று கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஜெரோம் 15 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் தற்பொழுது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.





