அ.தி.மு.க. செயலை வரவேற்கிறோம் – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் குறித்து திருமாவளவன் கருத்து
படுகொலை செய்யப்பட்ட பிரபல பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அ.தி.மு.க. கூட்டணியில் திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தைரியமாக பொது வாழ்விற்கு வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அதேநேரம் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
அவருக்கு பாதுகாப்பு தேவை. மேலும் அரசியலிலும் ஒரு இடம் தேவை. அதிமுக அப்படியொரு இடத்தை அளித்திருந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.





