ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பினத்தவர்களுக்கு அதிக நன்மைகள் செய்தது தான் என கூறிய டிரம்ப்!
அமெரிக்காவில் போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவத்தை அழைப்பேன் எனக் கூறிய டிரம்ப் கறுப்பினத்தவர்களை சமாதானப்படுத்தும் வகையில் டுவிட்டரில் பதிவு ஒன்று இட்டுள்ளார். அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பு இனத்தவருக்கு அதிக நன்மைகள் புரிந்து அதிபர் தான் தான் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு இனத்தவரிடையே வறுமை, வேலைவாய்ப்பின்மை குறைந்து கல்வி வாய்ப்பு அதிகரித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப் இதைவிட பல நன்மைகள் அடுத்து வர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.







