வால்பாறையில் சாலையை கடந்து செல்லும் புலி..!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே புலி ஒன்று சாலையை கடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் எஸ்டேட் பகுதியில் வன விலங்குகள் அதிகமாக வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் புலி ஒன்று சாதாரணமாக சாலையை கடந்து காட்டுப் பகுதிக்கு செல்கிறது. இதனை காரில் இருந்து சுற்றுலா பயணி வீடியோவாக எடுக்க தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டடாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.





