திருமாவளவன் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்: வைகோ கிண்டல்
கோவில்பட்டி: த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும் திமுகவுடனான நட்பு தொடரும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வைகோ, “திருமாவளவனின் இந்த விசித்திரமான பேச்சுக்கு உலகிலேயே மிக உயரிய விருதான நோபல் பரிசைத் தாராளமாகக் கொடுக்கலாம்” என கிண்டலாக விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




